×

அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை மூட கோரி மீனவர்கள் சாலைமறியல் போராட்டம்..!!

சென்னை: சென்னை எண்ணூரில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட கோரமண்டல் உரத்தொழிற்சாலை முன்பு மீனவர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோரமண்டல் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி 500கும் மேற்பட்ட மீனவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். சாலை மறியல் காரணமாக 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கோரமண்டல் நிறுவனத்தின் குழாயில் இருந்து அம்மோனியம் கசிந்து பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

The post அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை மூட கோரி மீனவர்கள் சாலைமறியல் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Fishermen ,CHENNAI ,Coromandel Fertilizer Plant ,Ennoor, Chennai ,Coromandel ,Dinakaran ,
× RELATED யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தண்டனை...